• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அருண் ஜெட்லி

February 1, 2018

விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்நாடாளுமன்ற மக்களவை துவங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்து அருண்ஜேட்லி வாசித்து வருகிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்து அருண் ஜெட்லி பேசும்போது,

விவசாயிகள் நலனுக்காக அரசு தொடர்ந்து பாடுபடுகிறது. விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கப்படும். விவசாயிகள் நலனுக்கு அரசு பல திட்டங்களை செய்துள்ளது. கிராம பொருளாதாரத்தை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும், ஏழைகள் மற்றும் விவசாயிகள் நலன் கவனிக்கப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது எனக் கூறினார்.

மேலும் படிக்க