• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த ரூ.3.2 கோடி செலவு – தேர்தல் ஆணையம்

January 31, 2018 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த  சுமார் ரூ.3.2 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி கடந்த மாதம் டிசம்பர் 21ம் தேதி ஆர்.கே.நகரில்  இடைதேர்தல் நடைப்பெற்றது.இந்த தேர்தலில் திமுக  சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு.நாகராஜன் மற்றும் சுயேட்சையாக டிடிவி தினகரன்,  உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர்.இந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,வழக்கமாக ஒரு இடைத்தேர்தல் நடத்த சுமார் 70 லட்சம் வரை செலவாகும்.ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு ரூ.3.2 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இது வழக்கத்தைவிட 3 மடங்கு கூடுதல் செலவாகியுள்ளதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் படிக்க