• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியல்

January 29, 2018 தண்டோரா குழு

கோவையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து  பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இன்று(ஜன 29) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அதன் ஒரு பகுதியாக கோவையிலும் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பீளமேட்டில் திமுகவின் சிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர். நா.கார்த்திக்  தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் நூற்றுக்கு  மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும்,காந்திபுரம் தமிழ்நாடு  ஓட்டல் முன்பு மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.அதேபோல் காந்திபுரம் அண்ணா சிலை அருகே திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.பேருந்து கட்டண உயர்வைக் திரும்ப பெற வில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் போது தெரிவித்தனர்.

மேலும் படிக்க