• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியல்

January 29, 2018 தண்டோரா குழு

கோவையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து  பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இன்று(ஜன 29) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அதன் ஒரு பகுதியாக கோவையிலும் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பீளமேட்டில் திமுகவின் சிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர். நா.கார்த்திக்  தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் நூற்றுக்கு  மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும்,காந்திபுரம் தமிழ்நாடு  ஓட்டல் முன்பு மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.அதேபோல் காந்திபுரம் அண்ணா சிலை அருகே திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.பேருந்து கட்டண உயர்வைக் திரும்ப பெற வில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் போது தெரிவித்தனர்.

மேலும் படிக்க