• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குளோனிங் முறையில் குரங்குகளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை

January 25, 2018 தண்டோரா குழு

உலகிலேயே முதல்முறையாக குரங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.

தமிழலில் எஸ்.ஜெ.சூர்யா படமான வியாபாரி படத்தில் வருவது போன்று ஓர் உயிரினத்தின் உயிரணுக்களிலிருந்து படியெடுத்து, அதே போன்ற உயிரினத்தை உருவாக்கும் முறை குளோனிங் ஆகும்.நவீன அறிவியலின் அசுரவளர்ச்சிக்கு உதாரணமான இந்த முறையின் மூலம் 1996-ஆம் ஆண்டு செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், இதே முறையைப் பின்பற்றி, சீனாவில் உள்ள சைனீஸ் அகாடமி ஆப் சைன்ஸ் (Chinese Academy of Sciences) அமைப்பின் விஞ்ஞானிகள், தற்போது உலகிலேயே முதல்முறையாக மக்காக் (macaque) வகை குரங்குகளை உருவாக்கியுள்ளனர்.இந்த குளோனிங் குரங்குக் குட்டிகளுக்கு ஜாங் ஜாங், ஹுவா ஹுவா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து, குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு குரங்குகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த சாதனையை படைத்துள்ள சீன விஞ்ஞானிகள் மனிதர்களையும் குளோனிங் மூலம் உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க