• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குஜராத் பேருந்து ஓட்டுநர் உத்தம் ஜீவன் ரக்ஷா படாக் விருதுக்கு தேர்வு

January 24, 2018 தண்டோரா குழு

குஜராத் பேருந்து ஓட்டுநர் “உத்தம் ஜீவன் ரக்ஷா படாக்” விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஷேக் சலீம் கபுர். இவர் அங்கு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி, குஜராத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு மொத்தம் 73 பக்தர்கள் பயணம் செய்தனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தீவிரவாதிகள் பேருந்தை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.இச்சம்பவத்தில் 7 பயணிகள் கொல்லப்பட்டனர், 14 பேர் படுகாயம் அடைந்தனர். இருப்பினும், அந்த பேருந்தை எங்கும் நிறுத்தாமல், அதில் பயணித்த 52 பயணிகளை, சாமார்த்தியமாக ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று, அவர்களுடைய உயிரை சலீம்
காப்பாற்றினார்.

இதனையடுத்து சலீமின் இந்த வீர செயலிற்காக படாக் விருது வழங்கப்படுகிறது.மேலும்,சலீமுக்கு 1 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கி கவுரவிக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க