January 24, 2018
தண்டோரா குழு
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அனைவருக்கும் வீடு என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் கனவுத் திட்டங்களில் ஒன்றான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன் படி மத்திய அரசின் அறிவிப்பில் தமிழகத்தில் சென்னை,கோவை உட்பட 12 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தில் தனியார் நிறுவனங்களும் பல்வேறு விதமான பங்களிப்புகளை அளித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் அனைவருக்கும் வீடு என்ற புதிய திட்டத்திற்கான துவக்க விழா கோவையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய இயக்குனர்கள்,கிருத்திகா விக்ரம்,மற்றும் சஞ்சனா விஜயகுமார் அனைத்து விதமான வசதிகளை உள்ளடக்கிய இந்த ஸமார்ட்சிட்டி அடுக்குமாடி குடியிருப்புகளை சாதாரண மக்களும் பிரதம மந்திரி கடன் திட்டத்தில் வீடு வாங்கும் வசதியை எங்களது நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.