• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட்ட விவகாரம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

January 23, 2018 தண்டோரா குழு

நடிகர் விஷால் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், கையெழுத்து குளறுபடி காரணமாக விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கலின் போது விஷாலை சிலர் முன்மொழிந்ததாக கூறியிருந்தனர். ஆனால், தன்னை முன்மொழிந்தவர்களை சிலர் மிரட்டுவதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நடிகர் விஷாலை முன்மொழிந்த தீபக், சுமதி மிரட்டப்பட்டனரா⁉ என விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிரட்டியது தொடர்பான முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க