• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் பொதுமக்களை தாக்கிய காவலர்

January 19, 2018 தண்டோரா குழு

திருப்பூரில் சிக்னலை மதிக்காத வந்த காவலர் வாகனம் பொதுமக்கள் மீது மோதியது மட்டுமில்லாமல்,பொதுமக்களை தாக்கியதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவர் இன்று(ஜன 19) மதியம் தனது சொந்த வேலை காரணமாக அவரது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் அவிநாசி சாலையில் உள்ள குமார் நகர் வழியே சென்றுள்ளார்.அப்போது அவ்வழியே வந்த காவல்துறை வாகனம் ஒன்று சிக்னலை மதிக்காமல் வந்ததோடு முனிராஜின் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ் காவல் வாகனத்தை ஓட்டி வந்த காவலர் அன்பழகனிடம் விளக்கம் கேட்க அன்பழகன் முனிராஜை தாக்கியுள்ளார் . இதனையடுத்து முனிராஜும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.இச்சம்பவத்தை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை சமரசம் செய்து வைக்க முற்பட்டனர்.

பொதுமக்களை தாக்கிய காவலரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும்,அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரியும் பாதிக்கப்பட்ட முனிராஜீடன் பொதுமக்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முனிராஜை சமரசம் செய்து காவல்நிலையம் அழைத்துச்சென்றனர் . இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க