• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈசா அறக்கட்டளை சார்பில் சமூக ஆர்வலர் பியூஸ்மனுஷ் மீது தொடரப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

January 18, 2018 தண்டோரா குழு

ஈசா அறக்கட்டளை சார்பில் சமூக ஆர்வலர் பியூஸ்மனுஷ் மீது தொடரப்பட்ட அவதூறு மனு மீதான விசாரணையை வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நம்பிராஜன் உத்திரவிட்டுள்ளார்.

கோவை ஈசா மையம் குறித்து அவதூறான தகவலகளை் பரப்பி வருவதாக சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ்மனுஷ் மீது ஈசா அறக்கட்டளையை சேர்ந்த வாசு தேவன் என்பவர் நேற்று(ஜன 18) அவதூறு மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ்குமார், கடந்த செப்டம்பர்,அக்டோபர் மாதங்களில் ஈசா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ்விற்கு எதிராகவும், நதிகளை இணைப்போம் திட்டம் குறித்தும், ஈசாவின் செயல்பாடுகள் குறித்தும் வேண்டும் என்றே அவதூறான தகவலகளை தெரிவித்து, பரப்பிக்கொண்டு இருப்பதாக முறையிட்டார்.

இதனையடுத்து ஈசா அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது குறித்த விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நம்பிராஜன் உத்திரவிட்டார்.

மேலும் படிக்க