January 17, 2018
தண்டோரா குழு
மொராக்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் வால், மெக்ஸிகோ நாட்டில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஏலம் விடப்பட்டது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனாசர் இனம் காலநிலை மாற்றம், இயற்கை அழிவுகளினால் முற்றிலும் அழிந்து போய்விட்டது. காலப்போக்கில் அந்த விலங்குகள்உடல்கள் அல்லது உடலின் பாகங்கள் பூமியின் கீழ் உள்ள கற்களில் ஆழமாக பதிந்து விடுகின்றன. பூமியின் கீழ் ஆய்வு செய்யும்போது, இந்த அந்த படிவங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், வட ஆப்பிரிக்காவில் அட்லான்டிக் கடலையும் மத்திய தரைக்கடலையும் எல்லையாக கொண்டுள்ள நாடு மொராக்கோ ஆகும். அந்த நாட்டில் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த போது, டைனோசரின் வால் ஒன்றை கண்டுபிடித்தனர். இதற்கிடையில், மெக்ஸிகோ நாட்டில் செவ்வாய்கிழமை (ஜனவரி 16) இரவு நடந்த ஏலத்தில், அந்த வால்ஏலம் விடப்பட்டது. சுமார் 4 மீட்டர் நீளம், 180 கிலோ எடையுடைய வால்1.8 மில்லியன் மெக்ஸிக்கோ பெசோஸ் (அதாவது 95,805 டாலர்)ருக்கு விலைபோனது.
இந்த தொகை கடந்த செப்டம்பர் மாதம், லத்தீன் அமெரிக்க நாட்டை தாக்கிய இரண்டு பூகம்பத்தால் பலத்த சேதமடைந்த 5,000 பள்ளிகளை மறுசீரமைப்பதற்கு, BBVABancomer Foundationனுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என என்று அந்த ஏல நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும், பெயர் வெளியிட விரும்பாத ஒரு மெக்ஸிகன் தொழிலதிபர், தனது சேகரிப்பிற்காக அந்த Fossilஐ வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.