• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியின் வரைவு வார்டு, மறு வரையறையில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வலியுறுத்தி நா.கார்த்திக் எம்எல்ஏ – மாநகராட்சி ஆணையாளரிடம் மனு

January 17, 2018 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அறிவித்த வரைவு வார்டு மறு வரையறையில் இருக்கும் குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயனிடம் மனு அளித்தார்.
அதில், கோவை மாநகராட்சி பகுதிகளில் வரி விதிக்கப்படாத குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மாநகராட்சியில் 70 சதவீத வீடுகளில் ஒரே வரி விதிப்பின் கீழ் சுமார் 3 அல்லது 4 குடியிருப்புகளுக்கு மேலாக வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். வரி விதிப்பு மட்டும் கணக்கில் எடுக்கும்போது வாக்காளர் பட்டியலில் உள்ள மற்றவர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். ஒரு சில வார்டுகளை இரண்டாக பிரித்து, வெவ்வேறு  சட்டமன்ற தொகுதியில் சேர்த்துள்ளனர். இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, பரிசீலனை செய்தி முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனுவை மாநகராட்சி ஆணையாளரிடத்தில், நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கினார்.

மேலும் படிக்க