• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க முடியாது – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

January 13, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவிற்கு தேவையான தண்ணீர் குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க முடியாது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி காவிரி தண்ணீர் தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு இன்று கடிதம் எழுதியிருந்தார். அதில், காவிரியில் 15 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். தமிழக விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக 7 டி.எம்.சி., தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும். எஞ்சிய நீரை 2 வாரத்தில் திறந்து விட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்த சித்தராமையா ‛ கர்நாடகத்திற்கு தேவைப்படும் தண்ணீர் அளவை விட குறைவாகவே இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இது குறித்த வழக்கில் அடுத்த மாதம் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க