• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட 8 பேர் மீது குண்டர் சட்டம் – கோவை கமிஷனர் அதிரடி

January 13, 2018 தண்டோரா குழு

கோவையில் ஏ.டி.எம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 8 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்திரவிட்டார்.

கோவை பீளமேடு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி அடுத்தடுத்து மூன்று தனியார் வங்கி ஏ.டி.எம்கள் உடைக்கப்பட்டு 30 லட்ச ரூபார் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக வடமாநில கொள்ளையர்கள் ஜில்பிகர், முஸ்டாக், மோசம்கான், சுபேர், அமித்குமார், சுபேர், முபாரக் , அமீன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தமிழகம் ,கேரளா ,கர்நாடகா போன்ற மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஏ.டி.எம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 8 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்திரவிட்டார்.

இந்நிலையில் கொள்ளை கும்பலிடம் இருந்து 3 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யபட்ட நிலையில் 27 லட்ச ரூபாயுடன் தலைமறைவான கும்பலின் தலைவன் அஸ்லாம் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகியோரை பிடிக்க உதவி ஆணையர் தலைமையில் தனிப்படையினர் ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் முகாமிட்டு இருந்தனர்.

ஆனால், ஒரு வாரமாக முகாமிட்டு இருந்தும் இருவரையும் பிடிக்க முடியாததால் தனிப்படையினர் நேற்று இரவு கோவை திரும்பினர்.

மேலும் படிக்க