• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போகி பண்டிகையால் சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்று மாசு அதிகரிப்பு

January 13, 2018 தண்டோரா குழு

போகி பண்டிகையால் சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

போகி பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலையில் பழைய பொருள்களை ஆங்காங்கே எரித்தனர். இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகள் புகை மூட்டமாகவே காணப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளிலும், முக்கிய சாலைகளிலும் எதிரே வரும் வாகனம் தெரியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பனி மூட்டமும் இருந்ததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போகி பண்டிகையால் சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். அதிகப்பட்சமாக விருகம்பாக்கத்தில் காற்றை சுவாசிக்கும் போது நுண்துகள்களின் அளவு 386-ஆக இருந்தது. கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியன அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் குறைவாக இருந்தது. குறைவான வெப்பநிலை, குறைந்த காற்றின் வேகத்தால் காற்றில் நுண்துகள்கள் ஒரே இடத்தில் நிலைக்கொண்டிருந்தன என்று வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க