• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயமில்லை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

January 11, 2018 தண்டோரா குழு

மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஜல்லிகட்டுக்கு தடை நீங்கி,பல்வேறு இடங்களில் ஜல்லிகட்டு நடைபெற்று வருகிறது.இந்நிலையில், உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிக்கான மாடுபிடி வீரா்கள் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.இதில் கலந்துகொள்ளும் ஜல்லிகட்டு வீரர்கள் முன்பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயம் என்று விழா கமிட்டி தெரிவித்துள்ளது.மேலும்,காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் மாடு பிடி வீரர்கள் ஏதேனும் அரசு அடையாள அட்டையை காண்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க