• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி மாநகராட்சி மேயர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கலாம் புதிய சட்டம் தாக்கல்

January 11, 2018 தண்டோரா குழு

மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்ய புதிய சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி இன்று வேலுமணி தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். மேயர் வேட்பாளர் என ஒருவர் நியமிக்கப்பட்டு, அவருக்கு அம்மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மக்களும் வாக்களித்து யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவர் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்கிடையில், கடந்த 2016ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கவுன்சிலர்கள் மூலமாக மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய முறையை கொண்டு வந்தார். சட்டப்பேரவையில் அதற்கான புதிய சட்டமும் இயற்றப்பட்டது.இதன் மூலம் கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ அதன் அடிப்படையில் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், மீண்டும் மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்படுகிறது. அதற்கான சட்டமசோதாவை இன்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த புதிய மசோதாவின் படி, மாநகராட்சி மட்டுமல்லாமல் பேரூராட்சி மற்றும் நகராட்சியின் தலைவர்களையும் மக்களே நேரடியாக தேர்ந்தெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல் நேரடி தேர்வு மூலம் சிறந்த நிர்வாக முறையை கொண்டு வர முடியும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்பில் தனி அதிகாரிகள் பதவிக்காலத்தை 4-வது முறையாக நீட்டிக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க