• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பணிக்கு திரும்புவது குறித்து முடிவெடுக்க தொழிற்சங்கங்களுக்கு 1 மணி நேரம் அவகாசம்

January 10, 2018 தண்டோரா குழு

பணிக்கு திரும்புவது குறித்து முடிவெடுக்க தொழிற்சங்கங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 1 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளது.

2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 7-ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வு விசாரித்து வருகிறது.
நிலுவைத் தொகையினை தவணை முறையில் வழங்கி வருகிறோம் என்று தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக ரூ.750 கோடி வழங்க அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மீதி தொகை வங்கியில் கடன் வாங்கி நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் ஓய்வூதிய ஊழியர்களுக்கு நவம்பர் 30, 2017 வரை பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது,பேச்சுவார்த்தைக்கு அரசு தயாரானால் ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று போக்குவரத்து ஊழியர்கள் எதிரான வழக்கில் தொழிற்சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளனர்.

இதையடுத்து, பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது.போக்குவரத்து ஊழியர்கள் இன்றே பணிக்கு திரும்ப வேண்டும் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.

மேலும்,பணிக்கு திரும்புவது குறித்து முடிவெடுக்க தொழிற்சங்கங்களுக்கு 1 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு 6 மணிக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் குறித்து இன்றே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க