• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்போலோவில் ஜெயலலிதாவை சந்தித்தவர்கள் யார்? விசாரணை ஆணையம் தகவல்

January 10, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை நேரில் சந்தித்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் ஆறுமுகசாமி விசாரணையில் சம்பந்தப்பட்டவர்களே வாக்குமூலமாக கொடுத்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம்ஆண்டுசெப்டம்பர் 22-ஆம் தேதிஉடல் நலகுறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்ததையடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அவர் கடந்த நவம்பர் மாதம் தனது விசாரணையை தொடங்கினார்.

இந்நிலையில்,அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம் மோகன் ராவ், கைரேகை பெற்று தந்த மருத்துவர் பாலாஜி ஆகியோர் சந்தித்துள்ளதாக ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் அவர்களே வாக்குமூலம் அளித்துள்ளனர். அதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் செப்டம்பர் முதல்வாரமும், டிசம்பர் 4-ஆம் தேதியும் சந்தித்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க