• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

July 11, 2016 தண்டோரா குழு

கோவை கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாயகி(38). இவரது கணவர் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர் தான் நடத்திவரும் ஸ்பேர்பார்ட்ஸ் கடைக்காக அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ஆனால் முறையாகத் திருப்பி தரமுடியாததால் அவர்கள் செல்வநாயகிக்கு தொல்லை கொடுத்துள்ளனர். பின்னர் அந்தக் கடையை பூட்டுப்போட்டு சாவியை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து கடந்த வாரம் செல்வநாயகி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் கந்துவட்டி கொடுத்தவர்கள் இவருக்குத் தொல்லை கொடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவகம் வந்த அவர் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரைத் தடுத்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த தீக்குளிப்பு நிகழ்வு வாரா வாரம் தொடர்வதால் புகார் கொடுக்க வருபவர்கள் முகஞ்சுளிக்கத் துவங்கியுள்ளனர். இதற்குக் காவல்துறையினர் ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க