• Download mobile app
02 Sep 2026, WednesdayEdition - 3857
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே கத்தியைக் காட்டி கொள்ளையடித்தவர் கைது.

July 11, 2016 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் சுமைதூக்கும் தொழிலாளி அப்பாஸ் நேற்று முன்தினம் இரவு காய்கறி மார்கெட்டில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் பொது, அதே மார்கெட்டில் பணியாற்றும் சக தொழிலாளியான மொகமத் அபூபக்கர்(23) என்பவர் தன்னை கத்தியைக்கட்டி மிரட்டி தன்னிடம் இருந்த செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வழிபறி செய்ததாக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்த காவல்துறையினர் அபூபக்கரை கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர். பின்னர் அவர்மீது கொள்ளையடித்தல், அதற்காக ஆயுதங்களைக் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கூறிய காவல்துறையினர், அபூபக்கர் மீது ஏற்கனவே குற்ற நடவடிக்கை, வழிபறி, சொத்துக்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தனர். இவற்றில் ஈரோட்டில் 2 வழக்குகளும், மேட்டுப்பாளையத்தில் 4 வழக்குகளும் மேலும் 1 வழக்கு கரூர் காவல்நிலைய எல்லையிலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க