• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெட் ஏர்வேஸ் விமான பெண் ஊழியர் கைது!

January 9, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு 4,80,200 அமெரிக்க டாலரை கடந்த முயன்றதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுதில்லி விமானநிலையத்தில் இருந்து சீனா நாட்டின் ஹாங்காங்கிற்கு திங்கள்கிழமை(ஜன 8) பயணம் செய்ய ஜெட் ஏர்வேஸ் விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் நடந்த அதிரடி சோதனையில், இந்தியாவில் இருந்து சுமார் 4,80,200 அமெரிக்க டொலர்கள் கடத்த முயன்றதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெண் விமான ஊழியர் ஒருவரை,வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அந்த பெண் ஊழியர், புதுதில்லியின் விவேக் விஹார் பகுதியியை சேர்ந்த அமித் மல்ஹோத்ரா என்ற ஏஜென்டுடன் பணிபுரிந்து வருகிறார்.இவர் அந்நிய செலாவணி கடத்தலுக்காக விமான ஊழியர்களை பயன்படுத்தி வருவதும், புதுதில்லியை சேர்ந்த வணிகர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, அதை வெளிநாடுகளுக்கு சில விமான ஊழியர்கள் மூலம் கடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த பணத்தின் மூலம், வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை வாங்கி, அதை இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கொண்டு வருகிறார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அமித் மல்ஹோத்ரா மற்றும் ஜெட் ஏர்வேஸ் பெண் ஊழியர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க