• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை

January 8, 2018 தண்டோரா குழு

கோவை மாநகரப் பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.

கோவை அவினாசி சாலையில்,சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் சாலைகளில் சாலை விதிமுறைகளை பின்பற்றும் பதாகைகளை ஏந்தி நின்றனர்.இதில் சாலை விதிமுறைகளை கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் சாக்குலேட்டுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் துறை ஆணையாளர்

“கோவை மாநகரத்தில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கோவையில்,குறிப்பாக பந்தய சாலை, கொடீசியா உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும்.

விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறினார்.அதிக ஒலி எழுப்பும் வகையில் வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் கோவை மாநகரத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களை கண்காணிக்க,ஏழு இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் மாநகரத்திற்குள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படும்” எனக் கூறினார்.

மேலும் படிக்க