• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விண்வெளி வீரர் ஜோன் யங் மறைவு

January 8, 2018 தண்டோரா குழு

சந்திரனுக்கு இரண்டு முறை சென்று திரும்பிய அமெரிக்க விண்வெளி வீரர் ஜான் யங் மரணமடைந்தார்.

அமெரிக்க நாசா மையத்தைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் ஜான் யங்(87) சில நாட்களாகவே நிமோனியா வியாதியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் (ஜன 5)காலமானார்.

விண்வெளி வீரர் ஜோன் யங், 1969ஆம் ஆண்டு அப்பலோ 10 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பிய போது அதில் பரிசோதனை அடிப்படையில் சென்றார். எனினும் அந்த விண்கலம் சந்திரனில் தரையிறங்கவில்லை. இதனையடுத்து நாசா, இரண்டு மாதங்களின் பின்னர் அப்பலோ 11 விண்கலத்தை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கியது.இதனையடுத்து இரண்டு முறை சந்திரனுக்கு சென்று திரும்பிய பெருமை அவரையே சேரும்.

நாசாவின் ஜெமினி, அப்பலோ, ஸ்பெஷல் ஷட்டில் உள்ளிட்ட விண்கலங்கள் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார்.அவருடைய மறைவுக்கு நாசா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க