• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானின் முன்னாள் விமானப்படை தளபதி மறைவு

January 6, 2018 தண்டோரா குழு

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் விமானப்படை தளபதி அஸ்கார் கான் நேற்று(ஜன 5) மாரடைப்பால் காலமானார்.

பாகிஸ்தான் விமானப்படையின் முதல் தளபதியாக பதவி வகித்த ‘ஏர் மார்ஷல்’ அஸ்கர் கான், தனது 96-வது வயதில் உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.

அஸ்கார் கான் தனது 35-வது வயதில் பாகிஸ்தான் விமானப்படையின் முதல் தளபதியாக பதவியேற்றார்.பின்னர், பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான சர்வதேச விமானச் சேவை நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.

கடந்த 1970ல், மதச்சார்பற்ற அரசியல் கட்சியான தெஹ்ரிக்-இ-இஸ்தக்லால் கட்சியை நிறுவினார்.இவரால் பாகிஸ்தான் நாட்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கு இணையாக தேர்தல்களில் போட்டியிட்டு மக்களின் செல்வாக்கை பெற இயலவில்லை.பின்னர் 2012ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தொடங்கிய தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியுடன் இணைத்தார்.

அஸ்கார் கான் மறைவுக்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன், பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி மற்றும் ராணுவ தளபதி காமர் ஜாவெத் பஜ்வா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க