• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தானின் முன்னாள் விமானப்படை தளபதி மறைவு

January 6, 2018 தண்டோரா குழு

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் விமானப்படை தளபதி அஸ்கார் கான் நேற்று(ஜன 5) மாரடைப்பால் காலமானார்.

பாகிஸ்தான் விமானப்படையின் முதல் தளபதியாக பதவி வகித்த ‘ஏர் மார்ஷல்’ அஸ்கர் கான், தனது 96-வது வயதில் உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.

அஸ்கார் கான் தனது 35-வது வயதில் பாகிஸ்தான் விமானப்படையின் முதல் தளபதியாக பதவியேற்றார்.பின்னர், பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான சர்வதேச விமானச் சேவை நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.

கடந்த 1970ல், மதச்சார்பற்ற அரசியல் கட்சியான தெஹ்ரிக்-இ-இஸ்தக்லால் கட்சியை நிறுவினார்.இவரால் பாகிஸ்தான் நாட்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கு இணையாக தேர்தல்களில் போட்டியிட்டு மக்களின் செல்வாக்கை பெற இயலவில்லை.பின்னர் 2012ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தொடங்கிய தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியுடன் இணைத்தார்.

அஸ்கார் கான் மறைவுக்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன், பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி மற்றும் ராணுவ தளபதி காமர் ஜாவெத் பஜ்வா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க