• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹரியானா கிராமத்தில் நாள்தோறும் ஒலிக்கும் தேசிய கீதம்

January 5, 2018 தண்டோரா குழு

ஹரியானாவில் ஒலி பெருக்கி மூலம் நாள்தோறும் தேசிய கீதம் பாடப்படுகிறது.

தெலங்கானாவில் உள்ள ஜம்மிகுண்டா கிராமத்தில் நாள்தோறும் இந்திய தேசிய கீதம் பாடப்படுவதை, பின்பற்றி ஹரியானா மாநிலத்தின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பானக்பூர் கிராமத்தில், ஒலிபெருக்கி மூலம் இந்திய தேசிய கீதம் நாள்தோறும் பாடப்பட்டு வருகிறது.

இது குறித்து, அம்மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில்,

“ஒவ்வொரு நாள் காலையும், தெலங்கானாவின் ஜம்மிகுண்டா கிராமத்தில் இந்திய தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது.இதை தொடர்ந்து, ஹரியானா பரிதாபாத் மாவட்டத்தின் பானக்பூர் கிராமத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

மேலும், ஜம்மிகுண்டா கிராமத்தில் தேசிய கீதம் பாடப்படுவதை தொலைக்காட்சியில் அந்த கிராமத்தின் தலைவர் பார்த்துள்ளார். தங்கள் கிராமத்திலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்துள்ளது. இதையடுத்து, அந்த கிராமத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் செலவில் 20 ஒலிபெருக்கிகள் அந்த கிராமத்தில் பொருத்தப்பட்டது.காலை 8 மணிக்கு தேசிய கீதம் ஒலிபரப்பாகும் போது, கிராமவாசிகள் மரியாதை செலுத்துகின்றனர்.

மேலும் படிக்க