• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

January 3, 2018 தண்டோரா குழு

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மதுரை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், எஸ்.பி. ஆகியோருடன் பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு கமிட்டியினரும் ஆலோசனையில் பங்கேற்றுனர்.

ஆலோசனைக்கூட்டத்தில் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு 7 மணி நேரமாக குறைத்து காலை 8க்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.மேலும், ஜனவரி 14 – அவனியாபுரத்தில் , ஜனவரி 15 -பாலமேட்டில், ஜனவரி 16 – அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் மதுரை ஆட்சியர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க