• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிச.31 மற்றும் புத்தாண்டு தினத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனை

January 2, 2018 தண்டோரா குழு

புத்தாண்டையொட்டி தமிழகத்தில் 211 கோடி ரூபாய்க்கு மேல் மதுவிற்பனை நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தாண்டை பலரும் நேற்று(ஜன 2) சிறப்பாக கொண்டாடினர்.அந்த வகையில் டிசம்பர் 31-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் களை கட்ட தொடங்கிய மதுவிற்பனை, நேரம் செல்ல செல்ல அதிகரித்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் ரூ.211 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாகவும் 31ஆம் தேதி அன்று ரூ.117 கோடி அளவிலும் ஜனவரி 1ஆம்தேதியன்று ரூ.94 கோடி அளவிலும் மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மதுபானங்களின் விலை 10% முதல் 12% வரை அதிகரித்த போதிலும், ரூ.36 கோடிக்கு கூடுதல் விற்பனையாகியுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி மற்றும் புத்தாண்டையொட்டி 200 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகத்தினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க