• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூரில் புத்தாண்டில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலசவ கல்வி !

December 30, 2017 தண்டோரா குழு

பெங்களூரில் அரசு மருத்துவமனையில், புத்தாண்டு அன்று பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று அந்நகரின் மேயர் அறிவித்துள்ளார்.

பெண் சிசு கொலை மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது. பெண் குழந்தை பிறந்தால், குடும்பத்திற்கு சுமையாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களுடைய கல்வி, திருமணத்திற்கான வரதட்சனை ஆகிய காரணங்களை காட்டி, அவர்களை வளர்க்க பல பெற்றோர்கள் விரும்புவதில்லை. கருவில் இருக்கும் பிஞ்சு குழந்தைகளை கருவிலேயே அளித்து விடுகின்றனர். பெண் சிசு கொலை தென் இந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில், வரும் புத்தாண்டில் சுகப்பிரசவம் மூலம் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு அதன் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று மேயர் அறிவித்துள்ளார்.

மேலும்,பிறந்த குழந்தையின் வங்கி கணக்கில் சுமார் 5 லட்சம் ருபாய் சேமித்து வைக்கப்படும். அந்த சேமிப்பு கணக்கின் வட்டி அவளுடைய கல்விக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க