• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக்க அதிகாரிகள் ஆய்வு !

December 30, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவில்லமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோர் வேதா இல்லத்துக்கு வந்தனர்.அவர்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சசிகலா வசித்த இரு அறைகளுக்கு ஏற்கெனவே சீல் வைத்துள்ளதால் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆய்வு மற்றும் அளவிடும் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வருகையை ஒட்டி, வேதா இல்லம் முன்பு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பணிகள் முழுவதும் நிறைவடைந்த பின்னர், வேதா இல்லம் அரசுடைமையாக்கப்படும் என்று கூறப்படுகிறது.இதுமட்டுமின்றி இன்று மாலைக்குள் வேதா இல்லம் அரசுடைமையாக்கபட்ட இடம் என்று அறிவிக்கப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க