• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹரியானாவில் ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட பெண் பலி

December 30, 2017 தண்டோரா குழு

சண்டிகரில் ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பவன் குமார்.அவருடைய தந்தை கார்கில் போரில் வீரமரணம் அடைந்தார்.அவருடைய தாயார் சகுந்தலா, சில நாட்களாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கடந்த டிச 28ம் தேதி, அவருடைய மகன் பவன் குமார் அழைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையின் மருத்துவர்கள், பவன் குமார் தாயாரின் அசல் ஆதார் அட்டையை கேட்டு உள்ளனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவருடைய ஆதார் அட்டையை எடுத்து செல்லவில்லை.

ஆனால், அவருடைய ஆதார் அட்டையின் புகைப்படத்தை, பவன்குமார் தனது கைபேசியில் வைத்திருந்தார். அதை காட்டி, தனது தாயாருக்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். ஆனால், அசல் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால், சகுந்தலாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். இதனால், சகுந்தலா மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பவன்குமார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புகார் செய்தார். ஆனால், பவன்குமாரின் புகாருக்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க