December 29, 2017
தண்டோரா குழு
ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்டசையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். கடந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட ஜெயலலிதா பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இதையடுத்து ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை சபாநாயகர் தனபாலிடம் டிடிவி தினகரன் வழங்கினார்.பின்னர் பேரவை தலைவர் அறையில் டிடிவி தினகரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சபாநயகர் தனபால் இதனையடுத்து ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுக் கொண்டார்.டிடிவி தினகரன் பதவியேற்பு விழாவில் தங்கதமிழ்ச் செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.