• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் கணவன், மனைவி அடித்து படுகொலை

December 29, 2017 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் சாலை, நாச்சிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துக்குமாரசாமி (67) விவசாயி அவரது மனைவி தெய்வாத்தாள் (62). இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு இவர்கள் வீட்டில் நீண்டநேரமாக கதவு திறந்து கிடந்த நிலையில், மின்விளக்கும் எரிவதை கண்டு, அப்பகுதியில் நள்ளிரவு ரோந்து வந்த போலீசார் சந்தேகம் அடைந்து சென்று பார்த்த பொழுது இருவரும் நள்ளிரவு அடித்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசிபாளையம் காவல்துறையினர் உடல்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிப்பதற்காக கொலை நடந்திருக்கலாம் என அவினாசிபாளையம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க