• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரில் கணவன், மனைவி அடித்து படுகொலை

December 29, 2017 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் சாலை, நாச்சிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துக்குமாரசாமி (67) விவசாயி அவரது மனைவி தெய்வாத்தாள் (62). இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு இவர்கள் வீட்டில் நீண்டநேரமாக கதவு திறந்து கிடந்த நிலையில், மின்விளக்கும் எரிவதை கண்டு, அப்பகுதியில் நள்ளிரவு ரோந்து வந்த போலீசார் சந்தேகம் அடைந்து சென்று பார்த்த பொழுது இருவரும் நள்ளிரவு அடித்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசிபாளையம் காவல்துறையினர் உடல்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிப்பதற்காக கொலை நடந்திருக்கலாம் என அவினாசிபாளையம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க