• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

SVS பொறியியல் கல்லூரியில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

December 28, 2017 தண்டோரா குழு

கோவை SVS பொறியியல் கல்லூரியில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மயிலேறிபாளையத்தில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான svs பொறியியல் கல்லூரி உள்ளது.இந்த கல்லூரியில் நேற்று  காலை  முதல் வருமான வரித்துறை சோதனை நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில்,இந்த வருமான வரி சோதனை மிடாஸ் மற்றும் அந்த நிறுவனத்துடன் வணிக ரீதியாக தொடர்புடைய நிறுவனங்களில் நடத்தப்படும் சோதனையின் ஒரு பகுதியாகவே வருமானவரித் துறையினர் SVS பொறியியல் கல்லூரியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,இந்த சோதனையில் கல்லூரி அலுவலகத்தில் உள்ள சந்திரசேகரின் அறையில் இருந்து
முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகின்றது. கல்லூரி அலுவலக 
வளாகத்தில் சோதனை நடப்பதையடுத்து அலுவலக ஊழியர்களின்செல்போன்களை பறிமுதல் செய்தனர்.வருமான வரித்துறையினர் நேற்று  இரவு முழுவதும் சோதனை நடைபெற்று வந்த நிலையில், இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க