• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக் கோரிய மேலூர் தம்பதியினர் ரஜினிக்கு கடிதம்

December 28, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக் கோரிய மேலூர் தம்பதி கதிரேசன், மீனாட்சி நடிகர் ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமாகனுமாகிய நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், அவர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என்று மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில், அவர்கள் ரஜினிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், பாசமிகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தங்களுடைய விருப்பமாம் நமக்கு முக்கியம் நம்முடைய தாய், தந்தை தான் அவர்களுடன் வாழும் தெய்வங்கள் நம் குடும்பம் தான் முக்கியம் எனக் கூறிய தங்களை மனமார வாழ்த்துகிறேன். நம் குடும்ப உறவு மேம்பட நான் பெற்று வளர்த்த என மகனும் தங்கள் மருமகனுமாகிய கலைச்செல்வன் என்கிற தனுஷை தனது பெற்றோராகிய என்னையும் என மனைவியையும் வந்து ஒருமுறை பார்த்து விட்டு செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறேன். குடும்ப உறவு மேம்பட வாழ்த்துக்கள்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க