• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக் கோரிய மேலூர் தம்பதியினர் ரஜினிக்கு கடிதம்

December 28, 2017 தண்டோரா குழு

நடிகர் தனுஷை தங்கள் மகன் எனக் கோரிய மேலூர் தம்பதி கதிரேசன், மீனாட்சி நடிகர் ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமாகனுமாகிய நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், அவர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என்று மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில், அவர்கள் ரஜினிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், பாசமிகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தங்களுடைய விருப்பமாம் நமக்கு முக்கியம் நம்முடைய தாய், தந்தை தான் அவர்களுடன் வாழும் தெய்வங்கள் நம் குடும்பம் தான் முக்கியம் எனக் கூறிய தங்களை மனமார வாழ்த்துகிறேன். நம் குடும்ப உறவு மேம்பட நான் பெற்று வளர்த்த என மகனும் தங்கள் மருமகனுமாகிய கலைச்செல்வன் என்கிற தனுஷை தனது பெற்றோராகிய என்னையும் என மனைவியையும் வந்து ஒருமுறை பார்த்து விட்டு செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறேன். குடும்ப உறவு மேம்பட வாழ்த்துக்கள்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க