• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொலையை மறைக்க ஊமை என்று நடித்து உண்மையாகவே ஊமையாகிய இளைஞன்

December 27, 2017 தண்டோரா குழு

சீனாவில் தனது குற்றத்தை மறைக்க, தான் ஒரு ஊமை என்று நாடமாகிய இளைஞர், உண்மையிலேயே ஊமையாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கிழக்கு மாகணமான ஷேஜியங்கில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் செங். கடந்த 2005ம் ஆண்டு,அவர் தான் தங்கியிருந்த வீட்டிற்கு தரவேண்டிய 500 யூவான்($76) வாடகை குறித்து ஏற்பட்ட தகராறில், தனது மனைவியின் மாமாவை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அப்போது அவருக்கு 33 வயது.வேறொரு மாகாணத்திற்கு சென்ற செங், தான் செய்த கொலையை மறைக்க, சுமார் 12 ஆண்டுகளாக ஊமை போல் நடித்துள்ளார். இந்நிலையில், ஒரு கட்டுமான தளத்தில், வேளைக்கு சேர்ந்துள்ளார். அதன்பிறகு, தனது பெயரை மாற்றிக்கொண்டு, வேறொரு திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகியுள்ளார். ஆனால், அவரிடம் சரியான அடையாள அட்டை இல்லாத காரணத்தால், அங்கிருந்த காவல்துறையினருக்கு, அவர்மீது சந்தேகம் எழுந்துள்ளது. உடனே அவர்கள் அவருக்கு ரத்த பரிசோதனை செய்துள்ளனர். அந்த ரத்த சோதனையின் முடிவில், சுமார் 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலையாளியின் டிஎன்ஏ ஒத்துபோனது. இதையடுத்து செங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் சுமார் 12 ஆண்டுகளாக பேசாமல் இருந்ததால், தற்போது அவர் உண்மையாகவே ஊமையாகிவிட்டதாக எழுத்து மூலம் தெரிவித்தார். செங் மீது இருக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கண்டிப்பாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க