• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியபாண்டியனை சுட்டது காவலர் முனிசேகரே விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

December 26, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது உயிரிழந்த பெரியபாண்டியனை சுட்டது உடன் சென்ற காவலர் முனிசேகர் என்பதை சென்னை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சென்னையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க ராஜஸ்தான் சென்ற போது மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். எனினும் இதுதொடர்பாக ராஜஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில்,தற்போது பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக சென்னை காவல்துறை விளக்கமளித்துள்ளது.அதில், பெரியபாண்டியனை காப்பாற்ற முயற்சித்தபோது அவருடன் சென்ற உதவி காவல் ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டார் என்றும் விசாரணைக்கு பின்னர் முனிசேகர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க