• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகுமார் கொலை வழக்கில் கைதான முபாரக்கிற்கு ஜனவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவல்

December 26, 2017 தண்டோரா குழு

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை வழக்கில் கைதான முபாரக்கை வரும் ஜனவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கடந்தாண்டு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சசிகுமார் கொலை வழக்கில் ஏற்கனவே, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக்கை நேற்று பொள்ளாச்சி அருகே சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து, கோவை சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது, கைதான முபாரக்கை வரும் ஜனவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க