• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

December 23, 2017 தண்டோரா குழு

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் மீதான கால்நடைதீவன ஊழல் வழக்கில் பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.

பீகாரின் தியோகர் மாவட்ட கருவூலத்தில் இருந்து 84.5 கோடி ரூபாய் பணம் எடுத்து மோசடி செய்தது தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவ்பால் சிங் இன்று தீர்ப்பு அளிக்கிறார்.இந்த வழக்கில் லாலு பிரசாத் உள்பட 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்து விட, ஒருவர் மட்டும் அரசு தரப்பு சாட்சியாக மாறி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இந்தவழக்கு விசாரணையை ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஷிவ்பால் சிங், நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் நீதிபதி பிரதீப் குமார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் கடந்த 13ம் தேதி இறுதி வாதமானது முடிவடைந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க