• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநிலங்களவையில் சச்சினை பேசவிடாமல் காங்கிரஸ் எம்.பிக்கள் அமளி

December 21, 2017 தண்டோரா குழு

மாநிலங்களவையில் முதல் முறையாக பேச நினைத்த சச்சினை பேசவிடாமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ரகசியமாக சந்தித்து பேசியதாக குற்றம்சாட்டினார். இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து கோஷங்கள் மற்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, பிற்பகலில் அவை மீண்டும் கூடியது. அப்போது இந்திய விளையாட்டின் எதிர்காலம் பற்றி, நியமன எம்.பியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கர் பேச முயன்றார். அப்போது, காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவர் தொடர்ந்து பேச முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு சச்சின் பேசுவதற்கு காங்கிரஸ் எம்.பிக்கள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், கோரிக்கையை ஏற்காத காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர்.

இதையடுத்து, தொடர்ந்து அமளி நீடித்தததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், முதல் முறையாக பேச நினைத்த சச்சின் டெண்டுல்கரை பேசவிடாமல் அமளியில் ஈடுபட்டது வெட்கக் கேடான செயல் என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் படிக்க