• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து நடிகர் சித்தார்த் சர்ச்சை கருத்து

December 21, 2017 தண்டோரா குழு

2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து உள்ளார்.

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு குறிப்பு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருக்கின்றனர். அதைப்போல் சமூகவலைத்தளங்களில் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “ராஜா, கனிமொழி நடிப்பில் திருட்டுப்பயலே-1 படத்துக்கான விமர்சனம் இன்று வெளியாகிறது. ஜெயலலிதா, சசிகலா மற்றும் குழுவினர் நடிப்பிலான திருட்டுப்பயலே-2 போலவே இந்த படத்துக்கான தீர்ப்பும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.

IMG_20171221_161854 (3)

பின்னர் இந்த ட்வீட் சர்ச்சையை கிளப்பியத்தை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை அவர் தனது ட்விட்டர் தளத்திலிருந்து நீக்கினார்.

மேலும் படிக்க