• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம் – பிரசன்னா

December 21, 2017 தண்டோரா குழு

தீர்ப்பு சரியெனில் இன்று வரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம் என நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி மற்றும் ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். எனினும் மறுபுறம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தீர்ப்பு குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தீர்ப்பு நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில், தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்!தவறெனில் இன்று முதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்!

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க