December 21, 2017
தண்டோரா குழு
தீர்ப்பு சரியெனில் இன்று வரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம் என நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி மற்றும் ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். எனினும் மறுபுறம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தீர்ப்பு குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தீர்ப்பு நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில், தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்!தவறெனில் இன்று முதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்!
இவ்வாறு கூறியுள்ளார்.