• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2ஜி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு – முக.ஸ்டாலின்

December 21, 2017 தண்டோரா குழு

2ஜி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வந்துள்ளது என திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடு எதிர்பார்த்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபிக்க தவறியதால் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சைனி அதிரடி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முக.ஸ்டாலின்,

“அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி அழிக்க போடப்பட்ட வழக்குதான் 2ஜி. இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.பொய் கணக்கை காட்டி, சித்தரிக்கப்பட்ட வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு குறித்த செய்தியை ஊடகங்கள் உண்மையாக வெளியிட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நேரத்தில் காட்டப்பட்ட முனைப்பை விட அதிகமாக தீர்ப்பு செய்தியை இப்போது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க