• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு – ஹர்திக் படேல்

December 18, 2017 தண்டோரா குழு

பாஜக பலமாக உள்ள இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது என ஹர்திக் பட்டேல் கூறியுள்ளார்.

குஜராத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜகவே முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் ஹர்திக் படேல் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்.சூரத், ராஜ்கோட், அகமதாபாத்தில் மின்னணு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன.பாரதிய ஜனதாவுக்கு 100க்கும் குறைவான இடங்கள் கிடைத்துள்ளதே எங்களுக்கு கிடைத்த வெற்றி தான்.பாஜகவுக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடரும். பட்டேல் சமூகத்தினர் சரியான முறையில் வாக்களித்துள்ளதாகவும் பட்டேல் சமூகத்தினர் அளித்த பல ஓட்டுகள் கணக்கில்வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்”. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க