குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிட்ட தலித் உரிமைச் செயற்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு சௌராஸ்டிரப் பகுதியான உனாவில் மாட்டின் தோலை உரித்ததாக தலித் மக்கள் நான்கு பேரை மதவெறியர்கள் கடுமையாகத் தாக்கினர். இந்த வன்கொடுமையை எதிர்த்து அந்தப் பகுதியில் எழுச்சிப் பேரணியை நடத்தியதன் மூலம் பிரபலமானவர், ஜிக்னேஷ் மேவானி.
அதன்பின் தொடர்ந்து தலித் மக்களின் உரிமைகளுக்காகவும் பாஜகவின் அரசியலை எதிர்த்தும் குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம், பேரணி நடத்தினார். அகமதாபாத் நகரிலிருந்து உனா நகரில் நான்கு தலித் மக்களுக்கு வன்கொடுமை இழைக்கப்பட்டதோ, அதே ஊரை நோக்கி பேரணியாகச் சென்று ஆகஸ்ட் 15ஆம் தேதி அங்கு பொதுக்கூட்டம் நடத்தினார் மேவானி.
அரசியல் கட்சிகளின் கூட்டத்தை விஞ்சும் வகையில் அந்தக் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தின் வட்காம் தனி தொகுதியில் சுயேட்சையாக மேவானி போட்டியிட்டார்.
இதனைத்தொடர்ந்து போட்டியிடாமல் விலகிக்கொள்வதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்தன.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் 90,375 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது.
இதையடுத்து, பாஜகவின் சார்பில் போட்டியிட்ட விஜய் சக்ரவர்த்திக்கும் ஜிக்னேசுக்கும் தான் போட்டி எனும் நிலையில், ஜிக்னேசுக்கு 63, 471 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளருக்கு 42,429 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இதன் மூலம் 18,150 வாக்குகள் அதிகம் பெற்று ஜிக்னேஷ் மேவானி சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு