• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் – பிரதாப் ரெட்டி

December 16, 2017 தண்டோரா குழு

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அப்பல்லோ மருத்துவ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதாப் ரெட்டி,

மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோதே ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் இருந்தார். மிகவும் உயர்தர சிகிச்சை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டதால், அவர் குணமடைந்து வந்ததார், ஆனால் நோயின் தீவிரம் காரணமாக, எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார். மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது என்பதாலேயே, அதை வெளியில் கூறவில்லை என்றார்.

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், மேற்கொண்டு எதையும் கூற முடியாது., விசாரணை ஆணையத்திடம் இருந்து தமக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்றும், சம்மன் வந்தால் விசாரணைக்கு ஆஜராக தயார் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க