• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அறிவுரை கூறியதால் அப்பாவின் நண்பரை கொன்ற இளைஞர்!

December 15, 2017 தண்டோரா குழு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுரை கூறிய அப்பாவின் நண்பரை மாணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அப்பட்டுவிளையை சேர்ந்த குமார். இவரது மகன் சந்தோஷ், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில், சந்தோஷ் அடிக்கடி கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததை அறிந்த தந்தை குமார், அவரது நண்பரான நவ்ஷாத் என்பவரிடம் விபரத்தை கூறியுள்ளார்.

இதனால் நண்பருக்கு உதவும் நோக்கில் நவ்ஷாத், வீட்டிலிருந்த சந்தோஷை நேற்று நள்ளிரவு சந்தித்து கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுரை கூறியதாக தெரிகிறது. அப்போது ஆவேசமடைந்த சந்தோஷ், வீட்டிலிருந்த கத்தியால் நவ்ஷாத்தை குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி வீட்டின் அருகே இருக்கும் கட்டடத்தின் மாடியில் மறைந்துகொண்டார்.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களின் உதவியுடன் சந்தோஷை கைது செய்தனர். அறிவுரை கூறியதால் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க