• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

December 15, 2017 தண்டோரா குழு

சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு நாளை தினத்தையொட்டி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்திய நாட்டின் பெருந்தலைவர்களில் ஒருவரான சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராக பதவி வகித்தார். அதோடு இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
கடந்த 195௦ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி,‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்பட்ட அவர், தனது 75வது வயதில் காலமானார்.

இந்நிலையில், அவருடைய நினைவு நாளையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டரில் “பெருந்தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேல் மறைந்த தினத்தில் அவரை நினைவுகூர்வோம். தேசத்திற்காக அவர் ஆற்றிய முக்கிய பணிக்கு, ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டுள்ளோம்” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தியாவின் சிறு சிறு மாநிலங்களை ஒன்றாக இணைத்து, நாட்டின் ஐக்கியப்படுத்தியத்தில், பட்டேல் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க