• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைத்துள்ளது- கவுசல்யா பேட்டி

December 12, 2017 தண்டோரா குழு

சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைத்துள்ளது என்று அவரது மனைவி கவுசல்யா கூறியுள்ளார்.

நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீதுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவுசல்யா,

சாதி வெறியர்களுக்கு இந்த தீர்ப்பு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.இந்த தீர்ப்பு நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீதித்துறையின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு நான் வரவேற்கிறேன். தாய் அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்ன குமார் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன். சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது என்று கவுசல்யா கூறினார்.

மேலும் படிக்க