• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தற்போதைய சூழ்நிலையில் பேரறிவாளனை விடுவிக்கவோ, தண்டனையை குறைக்கவோ முடியாது – உச்ச நீதிமன்றம்

December 12, 2017 தண்டோரா குழு

தற்போதைய சூழ்நிலையில் பேரறிவாளனை விடுவிக்கவோ, தண்டனையை குறைக்கவோ முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு விசாரணை இன்று நடைப்பெற்றது.அப்போது பேரறிவாளனை விடுவிக்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது. பேட்டரி குறித்து தியாகராஜனின் பிரமாண பத்திரத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன? ராஜிவ் கொலை வழக்கை சிபிஐ, சிறப்பு புலனாய்வு குழு முதலில் இருந்து விசாரிக்கலாம். இக்குழுவின் அறிக்கையை பேரறிவாளனுக்கு வழங்க உத்தரவிட்டது. மேலும்,பேரறிவாளன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் 2018 ஜனவரி 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் படிக்க