• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடுவானில் வைன் தரமறுத்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

December 11, 2017 தண்டோரா குழு

விமானத்தில் வைன் தரமறுத்ததால், விமான ஊழியர்களுடன் பெண் பயணி ஒருவர் தகராறில் ஈடுப்பட்டதால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ரஷ்ய நாட்டின் தலைநகரான மொஸ்கோவில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிஸுக்கு 43 பயணிகளுடன் விமானம் பயணமானது.அந்த விமானத்தில்,ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 44 வயது பெண் பயணி பயணம் செய்தார். அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு விமான ஊழியர்கள் வைன்(wine) வழங்கியுள்ளனர். ஆனால்,அந்த குறிப்பிட்ட பெண் பயணி மட்டும், மீண்டும் மீண்டும் வைன் கேட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் குடிபோதையில் இருப்பதை கண்ட ஊழியர்கள், வைன் தர மறுத்துள்ளார். உடனே, கோபம் அடைந்த அந்த பெண் பயணி, தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து,விமானிக்கு தகவல் தரப்பட்டது.இதனையடுத்து ஜெர்மன் நாட்டின் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து,அவசரமாக விமானம் தரையிரக்கப்பட்டது.

இதனையடுத்து,ஜெர்மனி நாட்டின் ஸ்டுகார்ட் சர்வதேச விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியது. விமானத்தில் தகராறில் ஈடுப்பட்ட பயணியை விமானத்திலிருந்து கீழே இறக்கி, விமானநிலைய காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.அந்த பயணியை கைது செய்த அவர்கள், அவருக்கு சுமார் 5,௦௦௦யூரோஸ்($5,871) அபராதம் விதித்தனர்.

மேலும் படிக்க